தென்மேற்கு பருவமழை, இயல்பைவிட தமிழகத்தில் அதிகம் பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஜூன் 1 முதல் ஜூன் 25 வரை 97.3 மி.மீ. மழை பொழிந்துள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில், 43.8 மி.மீ. மழை பொழியும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தற்போது இயல்பைவிட 122 சதவீதம் கூடுதலாக மழை பொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.