புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தேரின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில், மகாலிங்கம் (70) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 பேர் லேசான காயங்களுடன் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.