ஜூன் 25இல் நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து, 25 ராமேஸ்வரம் மீனவர்கள் உள்பட 77 பேர் அடுத்தடுத்து 30 நாள்களில் கைது செய்யப்பட்டனர். கைதை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தியும், மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியும் வந்த நிலையில் இது நடந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் மீது அப்பகுதி மீனவர்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.