நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் தொழிலதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் ஜூலை 2ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. தனது திருமணத்திற்கு சினிமா பிரபலங்களை நேரில் சந்தித்து சரத்குமார் குடும்பத்தினர் அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத் சென்ற வரலட்சுமி, நடிகர் பாலகிருஷ்ணாவை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட அவர், வரலட்சுமியை வாழ்த்தியுள்ளார்.