மக்களவை சபாநாயகர் தேர்வு விவகாரத்தில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் நள்ளிரவில் போன் செய்து பாஜக ஆதரவு கேட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல்வர் ஸ்டாலினை போன் மூலம் அழைத்து “மக்களவை சபாநாயகரை, எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரின் ஒருமித்த ஆதரவுடன் தேர்வு செய்ய வேண்டும்” என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அதேபோல், மற்ற தலைவர்களுக்கும் போன் அழைப்பு சென்றுள்ளது.