நாகை மீனவர்களுக்கு ஜூலை 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தது இலங்கை நீதிமன்றம். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். தமிழக மீனவர்களையும், ஒரு படகையும், காங்கேசன்துறை போலீசார் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கில் தமிழக மீனவர்கள் 10 பேரையும் ஜூலை எட்டாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.