தமிழகத்திற்கான நீரை விடுவிக்க முடியாது என கர்நாடக அரசு கூறுவது அதிர்ச்சியளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து விவாதிக்க நாளை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அதில், அனைவரையும் ஆலோசித்து சட்ட வல்லுநர்களின் கருத்தைக் கேட்டறிந்த அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.