நீட் தேர்வில் யார் முறைகேடு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரித்துள்ளார். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்த அவர், இரு மையங்களில் முறைகேடு நடந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது என்றார். மேலும் இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.