நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக, 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (20.07.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் தாலுகாக்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை 3ஆவது சனிக்கிழமை என்பதால், தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.