தமிழகத்தில் நிகழாண்டு குருவை பருவத்தில் பயிரிட்ட 14 வேளாண் பயிர்களுக்கும் 12 தோட்டக்கலை பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மகசூல் இழப்பு மற்றும் நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல் மற்றும் அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜூலை 31ஆம் தேதி வரை காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு வேளாண் அலுவலரை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.