அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, பாஜவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 1998இல் அதிமுக அமைச்சராக இருந்தபோது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ஐகோர்ட் நேற்று ரத்து செய்தது. இந்நிலையில், மீண்டும் அரசியல் செல்வாக்கு பெற ஆதரவாளர்களுடன் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. எனினும், இத்தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.