தமிழகத்தில் பானி பூரி மற்றும் பானியின் தரம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில் உணவுத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ஆப்பிள் கிரீன் எனப்படும் டையை (நிறமியை) கலப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே புற்றுநோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.