பிஹாரில் 9 நாள்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இரட்டை எஞ்சின் அரசில் மாநிலத்தில் பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருவதாக விமர்சித்த அவர், இதைக் கூட ஊழல் என்று ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனம் வரவில்லை என்று குற்றம் சாட்டினார். பாலம் இடிவது தொடர்பாக மாநில அரசு, அதிகாரிகளை ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க வலியுறுத்தியுள்ளது.