இந்தோனேசியா அருகேயுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டர் அளவில் 7.1 அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சாங்கை நகர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.