ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் அனைத்து படப்பிடிப்புகளையும் அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட தயாரிப்பாளர் சங்கம், நவம்பர் 1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளையும் எடுத்து வைக்கவும் தீர்மானித்துள்ளது.