போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் நெதன்யாகுவிடம் கமலா பேசியபோது, காசா போரை முடிவுக்கு கொண்டுவர நேரம் வந்துவிட்டதாகவும், அமைதியை நிலைநாட்டி பாலஸ்தீன மக்களுக்கு தேவையான, நிலையான தீர்வளிக்க இஸ்ரேல் முன்வர வேண்டுமெனவும் உலக நாடுகள் சார்பில் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.