மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தூத்துக்குடி எம்பி கனிமொழி உறுதியளித்துள்ளார். கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த போது பேசிய கனிமொழி, ஆண்டுதோறும் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்து வருவதால் சரியாக ஊதியம் கொடுக்க முடியவில்லை. 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.