மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்கள் பிரச்னைகளை பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு ஊன்றுகோலில் நடந்து கொண்டிருப்பதால், பிரதமர் அறிவுப்பூர்வமாக பேசுவார் என்று எதிர்பார்த்ததாக கூறிய அவர், ஆனால், மக்கள் நலன் சார்ந்த எந்த விஷயங்களையும் பிரதமர் பேசவில்லை என்றார். மோடி 111ஆவது முறையாக இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.