மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தலைமைச்செயலகத்தில் இருந்தவாறே, காணொலிக்காட்சி மூலம், வேலூர், திருப்பூர், நாகை, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.