திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓட்டுநர் சேமலையப்பன் மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் பள்ளி குழந்தைகளை காப்பாற்றுவதற்கு வேனை சாலையோரம் நிறுத்தி உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது இல்லத்திற்குச் சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக ஸ்டாலின் ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார்.