பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை இணைக்கும் பணியில் சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் முதல் கட்டமாக தென்காசி மாவட்டத்தில் ஜூலை 16 முதல் 21ஆம் தேதி வரை ஒரு சட்டமன்ற தொகுதி வாரியாக அதிமுக தொண்டர்களை சந்திக்க உள்ளதாக அவரது தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.