மே மாதத்துக்கான ரேஷன் பொருள்களை ஜூன் மாத இறுதிவரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் துவரம் பருப்பு, பாமாயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்கு தடையின்றி வழங்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ரேஷன் கடைகளில் அரிசி தவிர்த்து இதர பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.