தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளில் பயன்படுத்தப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி (PCBA) மீதான இறக்குமதி வரியை 15% லிருந்து 20% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 80% பிசிபிஏக்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், டெலிகாம் ஆபரேட்டர்கள் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதுடன், வாடிக்கையாளர்களிடமும் அச்சுமையை பகிர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.