உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தில் உதவியாளராக வேலை செய்து வந்த, ஹரியானாவைச் சேர்ந்த ரவி மவுன் (22) உயிரிழந்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மரணத்தை இன்னும் உறுதிபடுத்தாத நிலையில், இந்திய தூதரகம் ரவியின் சகோதரருக்கு உயிரிழந்துள்ளதாக கடிதம் எழுதியுள்ளது. உடலை அடையாளம் காண, டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதால் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.