மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதை ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுல் காந்திக்கு பாஜகவை பற்றி பேச உரிமை இல்லை என்றும் ஒரு கட்சியை ஒரு குடும்பமே அடிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.