கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அப்போது அவர் பேசியதாவது, மக்களவைத் தேர்தல் வெற்றி மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ராகுல் காந்தி கொடுத்த இனிப்பு கணிப்புகளை பொய்யாக்கி விட்டது. 8 முறை வந்து பிரதமர் மோடி கட்டமைத்ததை ராகுல் ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து தகர்த்து விட்டார். ராகுல் காந்தி எனக்கு வாங்கி கொடுத்த ஸ்வீட் தேர்தல் வெற்றியை இனிப்பாக மாற்றியது.
2004 மக்களவைத் தேர்தலில் கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. மக்களவைத் தேர்தலில் நாம் பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. புதிய வரலாற்றை படைப்பதற்கு கிடைத்த வெற்றி. நம் மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி விழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கான பாராட்டு விழா அல்ல, கூட்டணி கட்சித் தலைவர்களுக்கான பாராட்டு விழா என்றார்.
மேலும் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை நாம் உருவாக்கியுள்ளோம். அரசமைப்பு சட்டத்தை அழிக்க நினைத்தவர்களை தலை வணங்க வைத்துள்ளோம். கொள்கை உணர்வோடு கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் மாபெரும் வெற்றி சாத்தியமாகியுள்ளது