மத்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்டிஎல்) மற்றும் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) ஆகியவை கடற்படைக்கு தேவையான பல ரக போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கின்றன. இந்த நிறுவனம் மூலம் இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பில் அதி நவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்துக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளது.