நாட்டில் 2.50 கோடி பேர் ரேஷன் பொருள்கள் பெற தகுதி இல்லாதவர்கள் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பின்படி, வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்ட பலரும் ரேஷன் பொருள்களை பெறுவதாகவும், அவர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் விரைவில் நிறுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் சுமார் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது.