தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் பொருள் தரமில்லாதபோது நேரில் கேள்வி கேட்டால் பிரச்னை எழக்கூடும். ஆதலால் ஆன்லைனில் புகார் அளிக்க பொதுவிநியோகத் துறை வசதி செய்துள்ளது. https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்துக்கு சென்று, “புகாரை பதிவு செய்ய” என குறிப்பிடப்பட்ட இடத்தை அழுத்தியதும் திறக்கும் பக்கத்தில், பெயர், மொபைல் எண், மின்னஞ்சல், பிரச்னையை பதிவிட்டு “பதிவு செய்ய” என்பதை அழுத்தினால் புகார் சென்றுவிடும்.