‘லால் சலாம்’ படத்தைப் பார்த்த பின்னர்தான் ‘தி கோட்’ படத்தில் மறைந்த பவதாரிணியின் குரலை AI மூலம் பயன்படுத்த முடிவெடுத்ததாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். தான் இசையமைக்கும் எல்லா படங்களுக்குமே அதிக உழைப்பை கொடுப்பதாகக் கூறிய அவர், சில பாடல்களுக்கு எதிரான விமர்சனங்கள் எழுவது வழக்கம் என்றார். அத்துடன், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.