நிலச்சரிவால் கடுமையாக பாதித்த முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சூரல்மலை – முண்டக்கை இடையே இரும்பு பாலம் அமைக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. முன்னதாக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 200க்கும் மேற்பட்ட நபர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது.