வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மழை தொடர்ந்து பொழியும் பட்சத்தில், இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். தற்போது வரை அங்கு மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே நேற்று அதிகாலை நேர்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.