விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா வாடிய முகத்துடன் வெளியேறினார். 10ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 5,734 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கும் அவர், டெபாசிட் இழப்பார் என்று தெரிகிறது. இதனையடுத்து, அதிருப்தியில் இருந்த அவர், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, எதிர்த்து போட்டியிட்ட பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை விட கூடுதலாக 67,065 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தற்போது திமுக 1,23,712, பாமக – 56,248, நாதக – 10,520 வாக்குகள் பெற்றுள்ளன.