இன்றைக்குள் ஜூலை 31) விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகளுக்கு PM கிஷான் நிதி கிடைக்காது என மத்திய அரசு கூறியுள்ளது. இத்திட்டத்தில் ஆண்டுதோறும் ₹6000ஐ, 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அக்ரிஸ்டாக் திட்டத்தின் கீழ், பட்டா உள்ளிட்ட விவரங்கள், e-KYC பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, விவரங்களை பதிவு செய்யாதவர்களுக்கு 18ஆவது தவணை ₹2000 கிடைக்காது என எச்சரித்துள்ளது.