சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசி உள்ளனர். 100 கோடி நில அபகரிப்பு புகாரில் எம் ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ளவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சிபி சண்முகம் மற்றும் திருச்சி முன்னாள் எம்பி பரஞ்சோதி ஆகியோர் நேரில் சந்தித்த நலம் விசாரித்தனர்.