தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி மேற்பார்வையாளராக ஒருவரை நியமிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் ஒருவரையே பணி இணையாளராக தேர்வு செய்து அவர்களை மேற்பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பணித்தளங்கள் இருப்பதால் ஒவ்வொன்றுக்கும் ஒரு பணி இணையாளரை தேர்வு செய்யலாம். சென்னையை தவிர்த்து 37 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.