கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார். நெல்லை மேயர் சரவணன் ஆகியோர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதில் கல்பனா, தனது விலகலுக்கு உடல்நிலையை காரணமாக கூறியுள்ளார். ஆனால், மேயர் பதவியில் அவர் சரிவர செயல்படவில்லை, அவரின் கணவர் தலையீடு அதிகம் இருந்ததாக திமுக கவுன்சிலர்கள் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் சென்னைக்கு திமுக தலைமையிடத்தால் வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.