தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக விநியோகிக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு தேவையான பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு முழுமையாக அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் அனைவருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கிடைக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார். எனவே அடுத்த இரண்டு நாட்களில் ஜூன் மாதம் முடிய இருப்பதால் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் இதுவரை வாங்காதவர்கள் உடனே சென்று பெற்று கொள்ளுங்கள்.