INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “குறுகிய கால ராணுவ ஆள்சேர்ப்பு அக்னிபாத் திட்டத்தை, 24 மணி நேரத்தில் ரத்து செய்வோம். மீண்டும் பழைய முறையில் ஆள்சேர்ப்பு நடைபெறும்” எனக் கூறியுள்ளார்.