பேரூராட்சிகளில் ரூ.220 கோடியில், 300 கி.மீ. தூரத்திற்கு மண்சாலைகள், தார்சாலை, கான்கீரிட் மற்றும் பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்தப்படும். ரூ.125 கோடியில், 15 பேரூராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் ரூ.75 கோடியில் புதிய மாமன்ற கூடமும், ரூ.18 கோடியில், 15 இடங்களில் மழைநீர் தொட்டிகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது