தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சாராய வியாபாரி கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.