ஆன்லைன் செயலி முலமாக மகேஷ்(30) என்ற இளைஞரை ஏமாற்றிய சத்யாவை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் மொபைல் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகிய நிலையில், திருமணம் செய்து கொண்டுள்ளனர் பின்னர் சத்யாவின் பெயரை ரேஷன் கார்டில் மகேஷ் சேர்க்க முயன்ற போது, அவரது கணவராக மற்றொரு பெயர் பதிவாகி இருந்தது. இது குறித்து மகேஷ் விசாரித்த போது, சத்யாவுக்கு ஏற்கனவே பலருடன் திருமணம் ஆனதும், குழந்தையும் இருப்பது தெரிய வந்தது.