முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில், அவரது உறவினர் மகேஷ் என்பவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தன்னை மிரட்டி தனது நிலத்தை அபகரித்ததாக ஜெயக்குமார் மீது மகேஷ் புகாரளித்திருந்தார். இதில், தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ஜெயக்குமார் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 583 நாள்களாக மகேஷ் பதிலளிக்காததால் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.