முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்க தடை இல்லை என்று ஹைகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்பவர் தாடி வைத்ததால் தனக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று தொடுக்கப்பட்ட வழக்கில், இஸ்லாமியர்கள் தாடி வைத்துக் கொள்ள சட்டத்தில் அனுமதி உள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்ததுடன் எட்டு வாரங்களுக்குள் ஊதிய உயர்வு வழங்கவும் உத்தரவிட்டார்.