மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மாலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி நீலகிரி கோவை தேனி தென்காசி திண்டுக்கல் நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இடை மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.