கர்நாடகாவில் மழைப்பொழிவு காரணமாக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை காவிரியில் இருந்து 1.42 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 1.48 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேஎஸ்ஆர் அணையில் இருந்து 1.13 லட்சம் கனஅடியும், கபினியில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீரும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.