கள்ளச்சாராயம் குடித்து ஏற்கெனவே 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரவி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. சேலம் மருத்துவமனையில் மட்டும் இதுவரை 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 30 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.