மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்த நிலையில், பாசனத்திற்காக எப்போது திறப்பது என டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். காவிரியில் தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 நாள்களில் 21 அடி உயர்ந்து 109 அடியை தாண்டியது.