விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்ற முதியவர் ஜெயராமன் மரணமடைந்தார். டி.குமாரமங்கலத்தில் கள்ளச்சாரயம் வாங்கி குடித்த அவர் உட்பட மூவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் நடந்து முடிந்த சில நாள்களில், அதேபோன்ற சம்பவம் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.