நீட் எதிர்ப்பு தமிழக அரசு மற்றும் திமுகவின் நிலைப்பாடாக உள்ளது. இதன் காரணமாகவே நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் திமுகவின் மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் விலக்கு அளிக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.